Monday, September 21, 2009

பொது அறிவு செய்திகள்..........

  • ஆசியாவிலேயே முதல் முறையாக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது எங்கு தெரியுமா? இந்தியாவின் குஜராத்தில். கண்ட்லா சிறப்பு பொருளார மண்டலம் என்ற பெயரில் 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • உலகில் பழங்கள், பருப்புகள், சுவைப்பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
  • இந்திய இரயில்வே உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.
  • இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட மிகப் பழமையான பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை. 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1956ம் ஆண்டு இந்திய அரசால் நிரந்தர அங்கீகாரம் பெறப்பட்டது.
  • இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம், மும்பை. 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, அங்குள்ள மக்கள் தொகை 1 கோடியே 80 லட்சத்தை எட்டியுள்ளது. தற்போது நிச்சயமாக 2 கோடியைத் தாண்டியிருக்கும்.