எனக்காக காத்திருந்தாய்
சில மணித்துளிகள்..
உனக்காகவே காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நிமிடமும்...
எனக்காக அழுதாய்
சில நாட்கள்...
உனக்காகவே அழுகிறேன்
ஒவ்வொரு நாளும்....
கண்கள் இரண்டும் சோர்ந்து போகின்றன
உனை காணாமல்...
கைகள் வலுவிழந்தது
உன் கை பற்றாமல்...
செவிகளிரண்டும்
ஏங்கி நிற்கின்றன உன் குரல் கேளாமல்....
நீ அழைத்தாலே
ஓடி வருவேன் உனை பார்க்க.....
நான் கதறியும்
வரமறுக்கிறாய்
எனை பார்க்க...
நிஜத்தில் வர இயலாவிடினும்
கனவிலேனும் வந்து விடு....
Monday, February 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment