Monday, September 21, 2009

பொது அறிவு செய்திகள்..........

  • ஆசியாவிலேயே முதல் முறையாக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது எங்கு தெரியுமா? இந்தியாவின் குஜராத்தில். கண்ட்லா சிறப்பு பொருளார மண்டலம் என்ற பெயரில் 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • உலகில் பழங்கள், பருப்புகள், சுவைப்பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
  • இந்திய இரயில்வே உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.
  • இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட மிகப் பழமையான பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை. 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1956ம் ஆண்டு இந்திய அரசால் நிரந்தர அங்கீகாரம் பெறப்பட்டது.
  • இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம், மும்பை. 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, அங்குள்ள மக்கள் தொகை 1 கோடியே 80 லட்சத்தை எட்டியுள்ளது. தற்போது நிச்சயமாக 2 கோடியைத் தாண்டியிருக்கும்.


Monday, April 20, 2009

காதலின் மூன்றாம் விதி


நீ சிரிக்கவே கோமாளியாகிறேன்……..
நீ திட்டவே தவறிழைக்கிறேன்…….
உன் ஆறுதல்களுக்காகவே சோகமாகிறேன்.........
நீ சந்தோசப்படவே நான் சிரிக்கிறேன்........
நீ தடவிக்கொடுக்கவே காயங்கள் ஏற்படுத்திக்கொள்கிறேன்….
நீ கோபப்படவே வம்பிளுக்கிறேன்.......
நீ அணைக்கவே நொந்து போகிறேன்.......
உன் முத்தங்களுக்காவே நான் வெற்றியடைகிறேன்......
உன் கண்ணீருக்காவே நான் தோற்றுப்போகிறேன்....
நீ துடைத்துவிடவே மழையில் நனைகிறேன்....
நீ கனவில் வரவே தூங்குகிறேன்........
நீ கொஞ்சவே நான் குழந்தையாகிறேன்.....
நீ அன்பு காட்டவே நோயாளிகிறேன்.........
உன் செல்லக்கோபங்களுக்காகவே தாமதமாய் வருகிறேன்......
உன் பேரை சொல்லவே கிளி வளர்க்கிறேன்...........
நீ சூடிக்கொள்ளவே ரோஜா வளர்க்கிறேன்.........
உன் செல்ல சிணுங்கல்களுக்காவே கிண்டல் செய்கிறேன்......
உன் அகன்ற விழிகளை ரசிக்கவே அதிர்ச்சியளிக்கிறேன்....
நீ பெறுமிதப்படவே உண்மையாய் இருக்கிறேன்......

செயல்கள் எனதாயினும்
அதை ஆட்டுவிப்பது உன் எதிர் செயல்களதானடி.......

வினைகளுக்கெல்லாம் எதிர்வினையுண்டென்றது
நியூட்டனின் மூன்றாம் விதி

எதிர்வினைகளுக்காவே வினைகளிழைப்பதே
காதலின் மூன்றாம் விதி

காதலின் அகராதி


அமிர்தம்

என்னவள்
இதழ் தொட்ட
விடம் கூட அமிர்தம்தான்

பசி

தலைவலி
காய்ச்சல்
வரிசையில்
எப்போதாவது
எட்டி பார்க்கும்
நோய்

உணவு

அவள் வார்த்தைகளே உணவாயிருக்க
செவிக்கில்லாத பொழுது
சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்
மருந்து..........
அவளை நினைக்கவாவது
உயிர்வாழ வேண்டி அருந்தும் மருந்து......

முத்தம்

கனவில வாசல்
தலையணைக்கு எதிரி
தாமரையின் சொந்தம்
இதழின் சங்கீதம்
இன்பத்தின் ஆரம்பம்
பல நேரங்களில் சமாதானப்புறா
சில நேரங்களில் சண்டைக்கு விதை
பல நேரங்களில் தூக்க மாத்திரை
சில நேரங்களில் பித்து பிடிக்க வைக்கும் சத்தம்

அலைபேசி

700 கல் தொலைவிலிருந்தாலும்
எட்டி பிடிக்கும் தொலைவில்
என்னவளை கொண்டு வரும் மாயக்கண்ணாடி
சம்பளத்தின் பெரும் பகுதியை விழுங்கி
சன்மானமாய் பல முத்தம் பெற வைக்கும்
என்னவளவின் புகைப்படம் மட்டும் தாங்கி
எப்பொழுதும் என்னுடனையேயிருக்கும்
உடன் பிறவா சகோதரன்.......
ஆயிரம் நிமிடங்களை தாண்டி பேசினாலும்
பேசி முடியா விசயங்களை
நிறைய கேட்டிருக்கும் இக்கருவி.......
அவள் கண்ணீரை
என் கண்ணீரை
என் முத்தங்களை
அவள் முத்தங்களை
எங்கள் அந்தரங்கள் அனைத்தையும்
எங்கள் அனுமதியுடன்
ஒட்டு கேட்கும் கருவி........

தோழி

அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

Tuesday, April 14, 2009

விரோதி ஆண்டு.............

வா விரோதி ஆண்டே!!!!!!!
வா!!!!!!

நீ
நன்மைக்கு விரோதியாகமால்......
இனப்படுகொலைக்கு விரோதியாய்........
எம் உடன்பிறப்புகளின் உயிரெடுக்கும்
கொடுங்கோலுக்கு விரோதியாய்.......
இருப்பாயா????????????????

நீ வரும் நேரத்தில் பார்
தமிழில் அழுபவரைக்கூட கொல்கிறார்களாம்.........
இக்காலன்களுக்கு காலனாய்.....
இருப்பாயா???

இன்று உயிர் பிழைத்தாகி விட்டோம்.......
நாளை??????????
இன்று நிம்மதியில்லை
நாளையாவது?????????
இன்று பதுங்குக்குழி
நாளை???????
வினவும்
ஒட்டுமொத்த தமிழினத்தின்
கேள்விக்குறிகளுக்கும்
விரோதியாய்.........
இருப்பாயா???

ஆவலில்
ஆனந்த்தில்
உன்னை வரவேறக இயலவில்லை...........
சோகத்தில்
கோபத்தில்
கொடுமையில்
இயலாமையில்
ஆதங்கத்தில்
வரவேர்கிறோம்.......

உன்னிடம் நிறைய கேட்கவில்லை
தாய்மொழியாம் தமிழில்
நிம்மதியாய் அழும்
சுதந்திரத்தையாவது
எம் இனத்திற்கு தந்து விட்டுச்செல்.......

ஆதங்கத்துடன்,

சூரியா

Saturday, February 7, 2009

நீ நான் நிலா..........


1
நிலாவும் பொறாமைப்படுகிறதோ?
உன்னுடன் நான் சேர்ந்த்தில்
பொறுமி பொறுமியே மஞ்சளானதோ…..
இன்று பௌர்ணமி…

2
நீயற்ற எனை
பார்க்க மறுத்தே
மேகங்களுக்குள்
மறைந்து கொள்கிறதடி
நிலா……..


3
நாமிருவரும் சேர்ந்து
நிலாவை ரசித்த நாட்களை
அசை போட்டப்படி உறங்கவில்லை
நீயற்ற இந்நாளில்
நானும் நிலாவும்….

4
நிலவைக்காணவில்லை!!!!!!!!!!
நீயும் நானும் பிரிந்த்தை
கொண்டாடிக்கொண்டிருக்கிறதோ??????
இன்று அமாவாசை.....

5
நீயற்ற நான்
வானமிழந்த நிலா.........

6
நீயும் நானும் சண்டையிட்டது
பகலில்தான் என்றுதான்
பகலவனிடம் ஒளியை
இரவல் பெற மறுக்கிறதோ நிலா....
இன்று அமாவசை

7
நான் இரைத்த கிணற்று நீரில்
நீ முகம் கழுவ
ஒரு நிலாவால் மற்றொன்று சுக்கு நூறானது.........

8
தனை மறைக்க
துள்ளி வரும் மேகங்களை கண்டு
உனை பார்க்கமுடியாதே
எனும் ஏக்கத்தில்
நிலா விடும் கண்ணீரே
இரவு நேரபனித்துளி......

9
கனத்த மழைக்கு பின்
தோன்றும் நிலாவும்
உன் முகமும்
பெரிய மழைத்துளிதான்......

10
நீயற்ற
என் நிலையை
பிரதிபலிக்கத்தான்
அமாவாசையன்று நிலா மறைகிறதடி....

11
நிலாவிலும் உன் முகம் பார்க்கும் ஆசைதான் எனக்கு
அதை மதிக்காது எனை சீண்டும் உன் இரட்டைதான்
மேகத்தினிடையே மறையும் நிலா........

12
உன் நிறத்திற்கு போட்டியாக
நிலாவும் நிறம் மாறும்
நாளே பௌர்ணமி


13

உன் பயணம் தள்ளிப்போக
சாலை மறியலுக்கு நான் ஏங்கியதை
நிலா மட்டுமறியும்.........

14
உன்னிடம் சண்டையிட்ட எனை ஏதோதோ
சொல்லி திட்டுகிறதடி
அசைந்து அசைந்து எரியும் மெழுகுவர்த்தியும்
மறைந்து மறைந்து தோன்றும் நிலாவும்.........

15
நிலவுக்கு விளையாட்டுபுத்திதானடி
பஞ்சுமிட்டாயை ருசிக்கும் குழந்தையின் குதூகலத்தை
பலூனை பார்த்த குழந்தையின் பரவசத்தை
அம்மாவை பார்த்த குழந்தையின் பாசத்தை
நம்மிடம் ரசிக்கத்தான்
மேகங்களுக்குள் மறைந்து மறைந்து வெளிவருகிறதடி நிலா........

16
நீ எழும் நேரத்தையே பிரம்ம முகூர்த்தமாக்கச்சொல்லி
நானும் நிலாவும் பிரம்மனிடம் போடும் சண்டையின்
எதிரொலிதான் சேவலின் கூவல்..........


17
காலை டியூசனுக்கு
உன்னுடன் சேர்ந்து நடக்க
மிதிவண்டியின் சக்கரங்கள் காற்றிழந்ததை
காட்டிக்கொடுக்க நிலா விடும் பெருமூச்சே காலைத்தென்றல்...........

18

நீ நெட்டி முறிப்பதை கண்டு ரசிக்க
என் வீட்டு ஓட்டை பிரிக்கச்சொன்னதே
நிலாதானடி…….

19
நீ விழித்து விட்டதை உணர்த்தும் விதமாய்
சுப்ரபாதத்தை உன் குரலில்
என்னிடம் கொண்டு சேர்க்க
நிலா விடும் பெரிய மூச்சுக்காற்றே
காலை நேரத்தென்றல்…..

20
நீ ஊரிலில்லா செய்தியை வாசித்த
உன் வீட்டு நோஜாவின் மேல்
நானும் நிலாவும் விட்ட கண்ணீரின் சொச்சமே
ரோஜா மீதிருக்கும் பனித்துளி.......

21
நீயற்ற பொழுதுகளில்
நான் விடும் கண்ணீரை துடைக்க
அன்பாய் ஆதரவாய் கரம் நீட்டும் இரவுநேரத்தென்றல்
நிலாவின் மூச்சுக்காற்றுதான்

22
ஊர் குளத்தை நீ ரசிக்கும் சமயங்களில்
உன்னருகில் தனையிருத்தி பார்க்கும் ஆசையில்
எனக்கும் நிலவுக்கும் நடக்கும் ஒலிம்பிக்ஸில்
மேகங்களை தாண்டி தடை தாண்டும் வீரனாய் வெல்லும் நிலா......

23
நீயற்ற எனை பார்த்து
என் கண்ணீருக்காக
நிலா அழுததே நேற்றைய இரவின் மழை

24
உன் பிறந்தநாளுக்காய்
நானுனக்கு கொடுத்த
முத்துமாலைக்கு போட்டியாய்
நிலா வான்பூக்களை கொண்டு பின்னிய மாலையே
7 நட்சத்திட்ர கூட்டம்......

25
நிலவுக்கு வான்
எனக்கு நீ
நீயற்ற எனை கற்பனை செய்வதே கடினம்.......

26
நான்தான் உன் மீது பித்தெடுத்து
உன்னை தொடர்கிறேனென்றால்
நிலவுமா?
நீ போகுமிடமெல்லாம் உன்னை தொடருகிறதே....

27
அழகான உன்முகப்பருக்களுக்கு போட்டியாய்
வானம் வரைந்து கொண்ட பருக்கள்தான்
விண்மீன்களோ??

28
உன் நிழலை தொட நினைத்து
தோற்றுபோய் திரும்பிய எனை
ஆறுதல் படுத்த வந்த தென்றல்
நிலவின் சுவாசக்காற்றுதான்

29
உன் முகத்தை தொட்டுவிட்டு
நிலவை தொட்டுவிட்டதாய்
பீற்றிக்கொண்டதில்
இலவசமாய் கிடைத்த பட்டம்தான் ”பைத்தியம்”

30
எங்கு பார்த்தாலும் உன் முகம் மட்டுமே புலப்படுவதாய்
புலம்பிக்கொண்டிருந்தவனிடம்
உனக்குமா????
என வினவியபடி திருகிறதடி நிலா....

Wednesday, February 4, 2009

காதலின் மூன்றாம் விதி

நீ சிரிக்கவே கோமாளியாகிறேன்……..
நீ திட்டவே தவறிழைக்கிறேன்…….
உன் ஆறுதல்களுக்காகவே சோகமாகிறேன்.........
நீ சந்தோசப்படவே நான் சிரிக்கிறேன்........
நீ தடவிக்கொடுக்கவே காயங்கள் ஏற்படுத்திக்கொள்கிறேன்….
நீ கோபப்படவே வம்பிளுக்கிறேன்.......
நீ அணைக்கவே நொந்து போகிறேன்.......
உன் முத்தங்களுக்காவே நான் வெற்றியடைகிறேன்......
உன் கண்ணீருக்காவே நான் தோற்றுப்போகிறேன்....
நீ துடைத்துவிடவே மழையில் நனைகிறேன்....
நீ கனவில் வரவே தூங்குகிறேன்........
நீ கொஞ்சவே நான் குழந்தையாகிறேன்.....
நீ அன்பு காட்டவே நோயாளிகிறேன்.........
உன் செல்லக்கோபங்களுக்காகவே தாமதமாய் வருகிறேன்......
உன் பேரை சொல்லவே கிளி வளர்க்கிறேன்...........
நீ சூடிக்கொள்ளவே ரோஜா வளர்க்கிறேன்.........
உன் செல்ல சிணுங்கல்களுக்காவே கிண்டல் செய்கிறேன்......
உன் அகன்ற விழிகளை ரசிக்கவே அதிர்ச்சியளிக்கிறேன்....
நீ பெறுமிதப்படவே உண்மையாய் இருக்கிறேன்......

செயல்கள் எனதாயினும்
அதை ஆட்டுவிப்பது உன் எதிர் செயல்களதானடி.......

வினைகளுக்கெல்லாம் எதிர்வினையுண்டென்றது
நியூட்டனின் மூன்றாம் விதி

எதிர்வினைகளுக்காவே வினைகளிழைப்பதே
காதலின் மூன்றாம் விதி

Tuesday, January 27, 2009

உடன்பிறப்பு



மனதில் பலநாளாய் உறுத்திக்கொண்டிருப்பதால்
முள்ளெனலாம் என் உணர்வை………

தெருவில் கைகோர்த்து நடக்க....
சிறு சிறு விசயங்களுக்கு சண்டை போட......
அழும் நேரங்களில் சிரிக்க வைக்க......
அயர்ந்து உறங்கும் நேரங்களில் முகத்தில் தண்ணீர் ஊற்ற.....
முதல் தோசைக்காக அடித்துக்கொள்ள........
தேங்காய்நீருக்கு உதைத்துக்கொள்ள......
கீழே விழ வைக்க..........
கீழ் விழும் பொழுது தூக்கிவிட......
அன்புப்பரிசு வாங்கிக்கொடுக்க......
பிறந்தநாளன்று முதல் ஆளாய் வாழ்த்து சொல்ல.......
முதல் ஆளாய் பாராட்ட.......
முதல் ஆளாய் விமர்சனம் செய்ய........
அம்மாவிடம் போட்டுக்கொடுக்க.......
அப்பாவிடம் வக்காலத்து வாங்க......
என் கண்ணைதுடைத்து விட.......
என் கண்ணில் நீர் வரவைக்க.......

அம்மாவாய் அன்புகாட்ட
அப்பாவாய் அறிவுரைக்கூற
ஆசானாய் வழிநடத்த
ஒரு சகோதரனோ சகோதரியோ இல்லை என்பதில்
என் கண்ணில் குற்றால அருவி பொங்கா நாளேயில்லை.....

சிறு வயதில் தோன்றா உணர்வு
தோன்றியது பொறாமையால்தான்
சிறு குழந்தைகள் சகோதரரிடத்தில் சண்டையிடும் பொழுது
இனம் புரியாத உணர்வு கண்ணை மறைக்கும் கண்ணீராய் .....
என் பொறாமையும் வழிந்தோடும் கண்ணீருடன்
இதைதுடைக்கவும் ஆளில்லை என்பதில்
இன்னும் பொங்கும் ஆடி மாதக்காவிரியாய் என் கண்ணீர்.........

எங்க அண்ணனோட ஒரே பிரச்சனைடா எனும் நண்பர்களை நினைத்து சிரித்துக்கொள்வேன்
”ஒன்றின் அருமை அது அகப்படா பொழுதுதான் தெரியும்”