Tuesday, April 14, 2009

விரோதி ஆண்டு.............

வா விரோதி ஆண்டே!!!!!!!
வா!!!!!!

நீ
நன்மைக்கு விரோதியாகமால்......
இனப்படுகொலைக்கு விரோதியாய்........
எம் உடன்பிறப்புகளின் உயிரெடுக்கும்
கொடுங்கோலுக்கு விரோதியாய்.......
இருப்பாயா????????????????

நீ வரும் நேரத்தில் பார்
தமிழில் அழுபவரைக்கூட கொல்கிறார்களாம்.........
இக்காலன்களுக்கு காலனாய்.....
இருப்பாயா???

இன்று உயிர் பிழைத்தாகி விட்டோம்.......
நாளை??????????
இன்று நிம்மதியில்லை
நாளையாவது?????????
இன்று பதுங்குக்குழி
நாளை???????
வினவும்
ஒட்டுமொத்த தமிழினத்தின்
கேள்விக்குறிகளுக்கும்
விரோதியாய்.........
இருப்பாயா???

ஆவலில்
ஆனந்த்தில்
உன்னை வரவேறக இயலவில்லை...........
சோகத்தில்
கோபத்தில்
கொடுமையில்
இயலாமையில்
ஆதங்கத்தில்
வரவேர்கிறோம்.......

உன்னிடம் நிறைய கேட்கவில்லை
தாய்மொழியாம் தமிழில்
நிம்மதியாய் அழும்
சுதந்திரத்தையாவது
எம் இனத்திற்கு தந்து விட்டுச்செல்.......

ஆதங்கத்துடன்,

சூரியா

2 comments:

Tech Shankar said...

ஆதங்கம் புரிகிறது. விரோதி நமது கொள்கைகளுக்கு விரோதியாக இருக்காது என நம்புவோம்

சூரியப்பிரகாஷ் said...

நம்புவோம்

நம்பிக்கைதான் வாழ்க்கை இல்லையா அண்ணா.......