படித்த நாட்களில் சந்திக்காமல் இருந்ததில்லை..........
முடித்தபிறகு இது வரை சந்திததில்லை............
நீ எனை பற்றி சிந்திக்கிறாயா என சிந்திததில்லை..............
உனை சந்திக்கும் நாளையே சிந்திக்கிறது
என் மனம்......
யார் சொன்னது நட்புக்கு இலக்கணம்
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனுமென்று??????????????
நீயும் நானும்தானென்று சொன்ன பொழுதுகள்
விரிகிறது என் கண் முன்னே.............
கண் முன்னே இருந்த பொழுது உணரமுடியாத நம் நட்பு..............
காணாப்பொழுதில் உண்ர முடிகிறது.........
காற்றால் கூட நம்மை பிரிக்க முடியாது என்ற நாம்
காலத்தின் ஓட்டத்தில் இருக்கிறோம் ஆளுக்கொருபுறமாய்..........
ஆளுக்கொருபுரமாய் அம்மா அப்பா குடும்பம் வேலை பணம்
என்று இயங்கும் இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில்
என்றோ ஒரு நாள் சந்திப்போம்.............
அன்றுதான் விடுமுறை நம் இயந்திர உள்ளங்களுக்கும்
முதிர்ந்த எண்ணங்களுக்கும்..............
பார்த்தவுடன் நம்மை நனைக்க காத்திருக்கும் நம் கண்கள்.........
நம்மை இணைக்க காத்திருக்கும் கைகள்.........
ஆயிரமாயிரம் விசயங்கள் பேச காத்திருக்கும் உதடுகள்.............
அனைத்தும் இயங்கும் அன்று...........
நம் இயந்திரமனதை தவிர..........
மீண்டும் மனிதனாய் நம்மை மாற்றும் அந்நாள்
வெகு தொலைவிலில்லை நண்பா............
அந்நாள் என்னாளாலும் நமக்கு தோழமைதினம்தான்......
Wednesday, August 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment