Wednesday, August 4, 2010

வரம் கொடு............

லஞ்சம் வாங்காத
அரசு அதிகாரிகள்........
ஊழல் செய்யாத
அரசியல்வாதிகள்...........
அயோகியருக்களுககாக வாதாடாத
வழக்கறிஞர்கள்.........
”உழைத்துதான் பிழைப்பேன”
சொத்தை துறக்கும் முதல்வர் வாரிசு......
மக்களுக்கு சேவை செய்யும்
மந்திரிகள்...............................
பலமுறை மழை கண்டும்
பாழாகாத சாலைகள்..............
பணம்பிடுங்கா மருத்துவமனைகள்.....
இடிந்துவிழா பள்ளிகூடங்கள்....
நன்கொடை வாங்கா கல்விநிலையங்கள்........
உழைப்பிற்கேற்ற ஊதியம் தரும் தொழிலதிபர்கள்.......
ஒழுங்காக வரிகட்டும் மக்கள்......
ஸ்டவ் வெடிக்காத வீடுகள்.......
வரதட்சணை வாங்கா மணமகன்........
மனதில் அன்பை மட்டும் தாங்கும்
காதலிகள்...........
காதலிகளை ஏமாற்றா காதலன்கள்........

இறைவா!
எனக்கு சாபமிட வரம்கொடு.....
மனிதனுக்கு பணத்தாசை என்பதே இல்லாமல் போகட்டும்....

1 comment:

calmmen said...

hi surya unga kavithai

really super
nice