Wednesday, August 4, 2010

விடியல்

சந்தோசத்துடன் மனதிற்குள் பலமுறைக்கூறிக்கொண்டேன்............
நாளைமுதல் வேலைக்கு போகப்போகிறேன்
பட்டிணத்துக்கு........
அப்பா இறந்தபின் என் அம்மாவின் உழைப்பில்
படித்த நான்...............
கடிகாரமும் மின்சாரமும் கூட இல்லா
என்குடிசையை எப்படி மாற்றுவது?
என்னம்மாவை எப்படியெல்லாம் உபசரிப்பது
என்று யோசித்துக்கொண்டே படுத்திருந்தேன்........
டிவி வாங்கலாம்... ஃப்ரிட்ஜ் வாங்கலாம்...
பெரிய வீடு கட்டலாம்......
என்று யோசித்துக்கொண்டே தூங்க முயற்சி செய்தேன்...
5 மணி பஸ்சை பிடித்தாக வேண்டும்..
உழவன் ஏர் தூக்கும் நேரத்தில் கிளம்பினால்தான்
சாப்பிடும் நேரத்திற்குள் பட்டிணம் போக முடியுமாம்......
என்னை 5 வருடமாக 4 மணிக்கு கூவி கூவி எழுப்பிவிட்ட
ஏழைகளின் கரெண்டில்லா அலாரம்.....
கருப்பு சேவலை நம்பிதான் உறங்கலானேன்....
அதைவிற்றுதான் என் பயணச்செலவிற்காக பணம்
செய்து வைத்திருந்தார் என்னம்மா என்று தெரியாமல்......
சந்தோசத்துடன் உறங்கத்தொடங்கினேன்.....
பொழுது விடியுமா?

No comments: